பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 70 பேர் உயிரிழப்பு; 100 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கராச்சி: பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 70 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவர் பணிக்கு செல்லும் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

Pakistan hospital bombing kills at least 70

படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 70 பேர் பலியானார்கள்.

தற்போது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் பிரிவான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜமாட்-உர்-அஹ்ரான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள இ-மெயில் அறிக்கையில் ''இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதுபோல் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். விரைவில் வீடியோ செய்தியை வெளியிட இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரிப் கண்டனம்:

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+