Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக் கொடுக்கும் தேர்தல் முடிவுகள்.. பிளான் பி யை கையில் எடுக்க தயாராகும் நவாஸ் ஷெரீப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கட்சி ஆதரவில் சுயேட்சையாக போட்டியிட்ட 47 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்களுடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரீப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் 264 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 133 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினமானது என்றே தெரிகிறது.

Pakistan Parliamentary Election 2024, Nawaz Sharifs PMLN may form a coalition government with independent candidates


குறிப்பாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலரும், சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். இம்ரான் கான் கட்சியினரும் சவால் அளிக்கும் எண்ணிக்கையில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்று வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 107 தொகுதிகளில் 47 இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், நவாஸ் ஷெரீப் பிளான் பியை கையில் எடுத்துள்ளார். அதாவது சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்களுடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரீப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 17 இடங்களில் வென்றுள்ளது. பாகிஸ்தானில் சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் இஷாக் தார் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+