இந்திய ஏவுகணை உள்ளே வந்ததும்.. பதில் தாக்குதலுக்கு ரெடியான பாக்? அடுத்து நடந்தது என்ன? ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை கடந்த வாரம் சென்றதும் பாகிஸ்தானும் பதில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Print, Bloomberg வெளியிட்ட தகவல் | Pakistan-ல் Indian Missile விழுந்தது இப்படித்தான்|Oneindia Tamil

    இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்த வாரம் புதன் கிழமை மாலை சென்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும்.

    வருத்தம்

    வருத்தம்

    முதலில் இந்தியாவின் சிர்சா பகுதியில் இது ஏவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் சிர்சா ஏவுகணை தளத்தில் இருந்து இது ஏவப்படவில்லை. மாறாக பிரம்மோஸ் ஏவுகணை ரகசிய சாட்டிலைட் ஏவுதளம் ஒன்றில் இருந்துதான் ஏவப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் காரணமாகவும் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

    பாகிஸ்தான் முயன்றது

    பாகிஸ்தான் முயன்றது

    இந்த நிலையில் இந்தியாவின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் கடந்த வாரம் புதன் கிழமை தயாரானதாக bloomberg ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் மியான் சன்னு பகுதியில் இந்த பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது. இதையடுத்து பதிலடியை பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதற்காக ஏவுகணையை தயார் செய்தது.

    ஆனால் செய்யவில்லை

    ஆனால் செய்யவில்லை

    ஆனால் பாகிஸ்தான் கடைசியில் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததில் ஏதாவது தவறு நடந்து இருக்கலாம். இதில் எதோ பிரச்சனை இருக்கிறது என்பதை கணித்து பாகிஸ்தான் பதில் ஏவுகணை அனுப்பும் திட்டத்தை கைவிட்டதாக bloomberg ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியை இந்திய பாதுகாப்புத்துறை அல்லது ராணுவ பிரிவு தலைவர்கள் யாரும் உறுதி படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் இது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    ஆப் செய்யப்பட்டது

    ஆப் செய்யப்பட்டது

    இந்தியா சார்பில் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதும், உடனே இந்தியாவில் அனைத்து ஏவுகணை சிஸ்டமும் அணைக்கப்பட்டுள்ளது. தவறுதலாக வேறு ஏவுகணை ஏவப்பட கூடாது என்பதால் விமானப்படை உடனே ஏவுகணைகளை அணைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட உடனே அந்த ஏவுகணையை நாங்கள் கண்காணித்துவிட்டோம். ஆனால் இது விபத்து போல இருந்ததாக நாங்கள் சந்தேகித்தோம். அப்படி மட்டும் நாங்கள் சந்தேகிக்காமல் இருந்திருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+