ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறையை நிராகரித்த பாகிஸ்தான்! இந்திய தூதரகத்துக்கு சம்மன்.. பரபரப்பு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மறுவரையறையை நிராகரிப்பதாக கூறி இந்தி தூதரகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ 2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் அடங்கிய எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த ஆணையம் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. பல மாத ஆய்வுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கான 24 தொகுதிகள் நிலுவையில் வைக்கபட்டுள்ளது.

எங்கு எவ்வளது தொகுதிகள்?
தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள 90 தொகுதிகளில் காஷ்மீர் மண்டலத்துக்கு 47 தொகுதிகளுக்கும், ஜம்மு மண்டலத்தில் 43 தொகுதிகளும் அமைய உள்ளது. இந்த தொகுதி மறு வரையறை மூலம் ஜம்முவில் மட்டும் கூடுதலாக 6 தொகுதிகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூடுதலாக ஒரு தொகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கருத்து
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் தொகுதி மறுவரையறை செய்த குழு உள்நோக்கத்துடனும், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
Recommended Video

நிராகரிப்பதாக கூறி சம்மன்
இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில், ‛‛ இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் அதிகாரத்தை நீக்கும் நோக்கில் தொகுதி மறுவரையறை குழு செயல்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரிக்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications