கடலில் மூழ்கி எழுந்து.. தண்ணீர் சொட்ட சொட்ட தகவல்களை தந்த பாக். செய்தியாளர்! வேற லெவல் கடமை உணர்ச்சி
இஸ்லாமாபாத்: பைபர்ஜாய் புயலை எதிர்கொள்ளப் பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில், அங்கே ரிப்போர்ட்டர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்துவிட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், வெப்பம் குறைய ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே தென்தமிழகத்தில் சில இடங்களில் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 2, 3 மாதங்களாகக் கோடை வெப்பத்தால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மழை நமக்குச் சற்று இதமாக அமைகிறது. இதற்கிடையே வங்கக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் காரணமாகக் கணிசமாக மழை பெய்து வருகிறது.

புயல்: இந்த பைபர்ஜாய் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்ற போதிலும், பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. இந்த புயல் இன்று இரவு 9 மணியளவில் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.. பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் போது, 125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் அனைவரும் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில மணி நேரமாகவே குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சில இடங்களில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மேலும், கடல் அலைகளின் உயரமும் அதிகரித்துள்ளது.
இந்த கடுமையான புயல் காரணமாக சுமார் 120 கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பைபர்ஜாய் புயலால் ஏற்கனவே பல இடங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: இந்தப் புயல் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானையும் தாக்க உள்ளது. பொதுவாகப் புயல் போன்ற காலங்களில் டிவி சேனல்கள் மூலமே மக்கள் உடனுக்கு உடன் துல்லிமயான அப்டேட்களை தெரிந்து கொள்வார்கள். செய்தியாளர்களும் சூறாவளிக் காற்றையும் தாண்டி களத்தில் இருந்தபடி செய்திகளை உடனுக்கு உடன் தருவார்கள். இருப்பினும், செய்தியாளர்கள் சிலர் செய்யும் காரியங்கள் இணையத்தில் டிரெண்டாகிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பைபர்ஜாய் புயல் குறித்து டிவியில் நேரலை ரிப்போர்ட்டிங் அளித்து வருகிறார். அப்போது அவர் புயல் குறித்தும் அது இப்போது எங்கே இருக்கிறது வரும் நாட்களில் எங்கே மழை பெய்யும் என்பது எல்லாம் குறித்து அவர் விளக்குகிறார். அப்படியே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கும் அவர், திடீரென அப்படியே மைக்குடன் கடலிலேயே குதித்து விடுகிறார்.

ஒரே ஜம்ப்: அப்போதும் ரிப்போர்ட்டிங் செய்வதை விடாமல், கடலில் குதித்த பின்னரும் வானிலை குறித்த தகவல்களை அளிக்கிறார். மேலும், நிலம் தென்படாத அளவுக்கு நீர் அளவு அதிகரித்துவிட்டதாகவும் கடலுக்கு அடியில் செல்ல முடியாத அளவுக்கு மழை பெய்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
அதன் பிறகு கடலில் இருந்து அப்படியே மெல்ல ஏறிய அந்த நபர், தண்ணீர் சொட்டச் சொட்ட கராச்சியில் உள்ள அப்துல் ரெஹ்மான் நியூஸக்காக ஒளிப்பதிவாளர் தைமூர் கானுடன், அப்துல் ரெஹ்மான் கான் என்று சொல்லி தனது ரிப்போர்டிங்கை முடிக்கிறார். இந்த வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இது உண்மையாகச் செய்தி சேகரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவா இல்லை கிண்டல் செய்யும் வகையில் யாராவது எடுத்துப் பதிவிட்ட வீடியோவா எனத் துல்லியமாகத் தெரியவில்லை.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications