ஈரான் அதிரடி ஏவுகணை தாக்குதல்- இன்னும் எத்தனை வந்து விழுமோ? குலைநடுக்க பீதியில் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, சட்டவிரோதமாக ஈரான் நடத்திய இத்தாக்குதல் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என கதறியுள்ளது பாகிஸ்தான்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான யுத்தம் தற்போது விரிவடைந்து கொண்டே போகிறது. ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி குழுவினர் ஏமனில் இருந்து இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து செங்கடலில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீதும் ஹவுத்தி குழுவின் தாக்குதல் தொடர்ந்தது. இதேபோல லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து ஏமனில் உள்ள ஹவுத்தி குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். ஆனாலும் செங்கடலில் ஒரு கப்பலையும் இஸ்ரேல் நோக்கி செல்லவிடாமல் அழிப்போம் என அறிவித்தது ஹவுத்தி குழு.
இதனிடையே இஸ்ரேலின் உளவு மையமாக செயல்பட்ட இடம் என ஈராக்கின் முன்னணி தொழிலதிபர் ஒருவர் மாளிகையை ஈரான் அதிரடியாக தாக்கி அழித்தது. ஈராக்கின் குர்து பகுதியில் இத்தாக்குதலை ஈரான் நடத்தியது. ஈராக்கைத் தொடர்ந்து பாகிஸ்தானில் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களையும் ஈரான் இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்து போயுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்; 3 பெண்கள் படுகாயமடைந்தனர் என கூறியுள்ள பாகிஸ்தான், ஈரானுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது; பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது; பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல்; இத்தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும் ஈரான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அப்போது, இத்தாக்குதலுக்கான விளைவுகளுக்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான் -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம்












Click it and Unblock the Notifications