நாட்டிற்கு எதிரான ”பேஸ்புக்” பதிவிற்காக பாகிஸ்தான் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பாகிஸ்தானில் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேசத்திற்கு எதிராக மத ரீதியான முகநூல் பதிவுகளை இட்டுள்ளார். அதனை செய்ததற்காக அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்வான் ஹார்டெர் என்ற அந்த இளைஞர் மீது குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், 2,50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications