Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட தடை! பல்கலைக்கழகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு திடீரென்று பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹோலிக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்துக்களின் பண்டிகையாக உள்ள ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படும். இந்த ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

பனிக்காலத்துக்கு குட்பை சொல்லிவிட்டு வெயில் காலத்தை வரவேற்றல் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது.

pakistans-higher-education-commission-has-banned-holi-celebrations-in-universities

இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை விட வடஇந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசுவார்கள். இந்த சமயத்தில் ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானில் திடீரென்று ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமாபாத்தில் உள்ள க்வாய்ட்-இ-ஆசாம் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 12ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடினர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில் தான் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‛‛இஸ்லாத்தின் கலாச்சாரம் மற்றும் தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்தும் வகையில் இளைஞர்களை மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஆனால் நாட்டின் சமூக-கலாச்சார விழுமியங்களை மீறுவதோடு, இஸ்லாமிய அடையாளத்தை பாதிக்கும் ஹோலி போன்ற பண்டிகையை கொண்டாடப்படுவதை பார்ப்பது வருத்தமாக உள்ளது. இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது நாட்டின் நற்பெயருக்கு பாதகமானது. இதனால் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்'' எனக்கூறி தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் இந்த அறிவிப்பு என்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+