பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாக்., ராணுவ அதிகாரி.. இவர் பயங்கரவாதியின் மகனாச்சே
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை பார்த்து கண்ணடித்த வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது. அவரது செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:
பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருப்பவர் அகமது ஷெரீப். இவர் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) பிரிவின் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ‛‛இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளார். அவர் தற்போதைய அரசுக்கு எதிரானவர். அவர் இந்தியாவின் கையாளாக செயல்படுகிறார்'' என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் அகமது ஷெரீப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் பற்றி கேள்வி எழுப்பினார். அதாவது, சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான அவரது குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை எழுப்பினார். அதற்கு ‛‛இம்ரான் கான் ஒரு மனநோயாளி'' என்று கூறிவிட்டு பெண் பத்திரிகையாளரை நோக்கி சிரித்துவிட்டு கண்ணடித்தார்.
இதனை பார்த்து பெண் பத்திரிகையாளர் ஷாக் ஆனார். மேலும் அகமது ஷெரீப் கண்ணடித்தது ங்கிருந்த பத்திரிகையாளர்களின் கேமராக்களில் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. நெட்டிசன் ஒருவர், ‛‛இது பாகிஸ்தான் ராணுவம் தொழில் பக்தி இன்றி செயல்படுவதை காட்டுகிறது. ராணுவ சீருடையில் உள்ள ஒருவர் எப்படி இப்படிப் பொதுவெளியில் கண்ணடிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவரோ, ‛‛பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இப்படி செயல்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை'' என்று கூறியுள்ளார். மேலும் சிலர் அவரை ‛‛பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்''
இப்போது சர்ச்சையில் சிக்கி உள்ள அகமது ஷெரீப் நம் நாட்டுக்கு எதிராக பொய்களை தொடர்ந்து கூறி வரும் நபர்களில் ஒருவர். எதற்கெடுத்தாலும் நம் நாட்டை குற்றம்சாட்டு புத்தி கொண்டவர். இம்ரான் கானுக்கும், நம் நாட்டுக்கும் எந்த தொடர்பு இல்லை. ஆனால் இம்ரான் கான் நம் நாட்டின் கையாள் என்று கூறியிருந்தார்.
மேலும் இவரது பின்னணியில் சர்ச்சைக்குரிய ஒன்றாக தான் உள்ளது. இவரது தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்முத் ஒரு பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டவர். அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்ட அல்-கொய்தா த பயங்கரவாத அமைப்பின் நிறுவன தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனின் உதவியாளராக இருந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications