சிறையில் கணவர்: உயிர் அணுவை கடத்தி வந்து குழந்தை பெற்ற 'பலே' பாலஸ்தீன பெண்
Subscribe to Oneindia Tamil
காசா: இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர் ஒருவரின் உயிரணுவை அவரது மனைவி கடத்தி வந்து கருவுற்று ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் வடக்கு காசாவில் உள்ள பெய்ட் ஹனுன் பகுதியைச் சேர்ந்தவர் தமீர் ஜானின்(29). அவருக்கு திருமணமான 3 மாதத்தில் இஸ்ரேல் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் தமீரின் மனைவி சிறையில் உள்ள தனது கணவரின் உயிரணுவை கடத்தி வந்து கருவுற்றார்.
அவ்வாறு கருவுற்ற அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று அதற்கு ஹஸன் என்று பெயர் வைத்துள்ளார். காசா பகுதியில் சிறையில் உள்ள கணவரின் உயிரணுவை கடத்தி கருவுற்று பிறந்த முதல் குழந்தை ஹஸன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications