சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.... நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பனாமா நாட்டில் முதலீடு செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இஸ்லாமாபாத்: பனாமா நாட்டில் முதலீடு செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு பனாமா நாட்டில் பல்வேறு கம்பெனிகளில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் மில்லியன் டாலர்கள் பணத்தை பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு தயார் என்றும் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
மேலும் 60 நாள்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் ஹாசன், உசேன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விசாரித்த 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறியதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பனாமா நாட்டில் வெளிநாட்டு பிரமுகர்கள் முதலீடு செய்ததும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முதலீடு செய்தது தெரியவந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications