மலேசியா, பிரான்ஸ் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
கோலாலம்பூர்: மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள பெகாங் பகுதியில் ஸ்ரீ மரத்தாண்டவர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 3ம் தேதி பங்குனி உத்திர விழா நடைபெற்றது. அப்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழா அன்று பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தனர்.

பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பாலை வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவின்போது நடந்த ரத உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதே போன்று பிரான்சில் இருக்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. அங்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். முருகனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் உள்ளது போன்று உணர்ந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications