விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்.. கதறிய பயணிகள்.. கண்டுகொள்ளாத பைலட்
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இருந்து வந்த வித்தியாசமான சத்தம் காரணமாக அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
Recommended Video

லண்டன்: பிரிட்டிஷ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இருந்து வந்த வித்தியாசமான சத்தம் காரணமாக அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த வித்தியாசமான சத்தம் 10 மணி நேரமாக கேட்டதாக புகார் அளித்து உள்ளனர்.
முதலில் அந்த சத்தம் வெளியில் இருந்து வருவதாக பயணிகள் நினைத்து இருக்கின்றனர். மேலும் பெரிய அசம்பாவிதம் எதோ நடக்க போவதாகவும் நினைத்து பயந்து இருக்கின்றனர்.
தற்போது அந்த விமானத்தில் ஏற்பட்ட சத்தத்திற்கு என்ன காரணம் என பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

விமானத்தில் கேட்ட வித்தியாசமான சத்தம்
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து லாஸ் வேகாஸுக்கு சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு இருக்கிறது. அந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் அதில் இருந்து மிகவும் வித்தியாசமான சத்தம் ஒன்று வந்து இருக்கிறது. மேலும் படங்களில் காட்டப்படுவது போல விமானம் வெடித்துவிடுமோ என்று பயணிகள் பயந்து இருக்கின்றனர். இந்த சத்தம் 10 மணி நேரமாக கேட்டு இருக்கிறது. எந்த இடத்தில் இருந்து சத்தம் வருகிறது என்பது விமான பணிப்பெண்களுக்கு கூட தெரியாமல் போய் இருக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் விமானி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
|
டிவிட்டர் முழுக்க சண்டை
10 மணிநேர மோசமான பயணத்தை முடித்து வந்த பயணிகள் தற்போது அந்த அனுபவம் குறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளனர். அதில் பலரும் தங்களது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இதில் அவதிப்பட்ட பயணிகளுக்கு மிகவும் குறைந்த அளவில் 20 பவுண்ட் மதிப்புள்ள செக் மட்டும் இழப்பீடாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த விமானத்தில் தான் பட்ட கஷ்டம் குறித்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
|
மன்னிப்பு கேட்டது
இந்த நிலையில் தங்களின் தவறுக்கு அந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. இனி இது போன்ற காரியங்கள் நடக்காது என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்து புகார் அளித்த பயணிகள் அனைவரிடமும் தனியாக பேச முடிவு செய்து இருக்கிறது.

காரணம் என்ன
தற்போது அந்த விமானத்தில் இருந்து வந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று அந்த நிறுவனம் விளக்கி இருக்கிறது. அதன்படி அந்த விமானத்தில் இருந்த ஆக்சிசன் சிலிண்டரில் எதோ பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. பிரச்சனை காரணமாக் ஒரே ஒரு ஆக்சிஜன் மாஸ்க் வெளியே வந்து தொங்கி இருக்கிறது. இது உருவாக்கிய சத்தமே விமானம் முழுக்க கேட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications