சின்னபசங்க பரவாயில்லையே... ஜன்னல் சீட்டுக்காக அடித்துக் கொண்டதால் தரை இறங்கிய விமானம்!
பெல்ஜியத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணிகள் திடீரென அடித்துக்கொண்டதால் பீதியடைந்த பைலட் விமானத்தை அவசரமாக தரையிக்கினார்.
பெல்ஜியம்: நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணிகள் இருவரிடையே திடீரென ஏற்பட்ட மோதலால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இருந்து மால்டாவிற்கு ஒரு விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இத்தாலி நாட்டின் எல்லைக்குள் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதோடு விமானத்தின் கதவையும் திறக்க முயன்றனர்.

இதனை மற்றப் பயணிகளும் பணிப்பெண்களும் தடுத்ததால் ஆத்திரமடைந்த சண்டைக்காரர்கள் அவர்களையும் தாக்கினர். 'மோதல் முற்றவே விஷயம் பைலட்டின் காதுகளுக்குச்சென்றது. இதையடுத்து இத்தாலியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
கைகலப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சீட் மாறி அமருவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்ததாக சக பயணி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications