ரோபோட்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ராணுவம்.. பாதுகாப்பிற்கான அல்ட்டிமேட் ஏற்பாடு!
அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு ராணுவ துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையிடமாக பெண்டகன் நீண்ட நாட்களாக ரோபோக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த இருக்கிறார்கள்.
இந்தியாவில் நாம் ரோபோவை ராணுவத்தில் பயன்படுத்தலாமா என்று எந்திரன் படத்தை வைத்து விவாதம் நடத்திக் கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்கா இதில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள்
அமெரிக்கா முழுக்க முழுக்க அவர்கள் ராணுவத்தில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மிக குறைந்த அளவில் மனிதர்களை பயன்படுத்தினால் போதும் என்று முடிவெடுத்துள்ளது. இப்படி எல்லா இடங்களிலும் ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும். அதே சமயம் தாக்குதல் மிகவும் துல்லியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அணு ஆயுத தடை
இதற்காக பெண்டகனில் கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் செயல்படும் ரோபோக்களை அவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இதன் முதற்கட்டமாக அணு ஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் ரோபோட்களை உருவாக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது.

குண்டுகள்
அதேபோல் அமெரிக்கவில் பெருமைப்பாலான ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் குண்டுகளை அகற்றும் போதுதான் மரணம் அடைகிறார்கள். இதனால் குண்டு வெடிப்பை தடுக்கும் வகையில், ரோபோக்களை பயிற்சி அளிக்க அமெரிக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது. குண்டு வெடிப்புகளை தடுக்கவும், எத்தகைய குண்டுகளையும் எளிதாக செயலிழக்க செய்யும் ரோபோட்டுக்களை சோதனை செய்து வருகிறது.

எப்போதில் இருந்து வரும்
மொத்தம் ஐந்து படைகளுடன் ஆறாவது படையாக இந்த ரோபோக்கள் சேர்க்கப்பட உள்ளது. ஆனால் இது எப்படி நடைபெறும் என்று விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக அமெரிக்க ராணுவம் இன்னும் சில மாதங்களில் ரோபோக்களை வைத்து சில சோதனைகள் நடத்த இருக்கிறது. அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications