தனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு!
தனிமையான உணர்பவர்களுக்கு மனஅழுத்தத்தால் முன்கூட்டியே மரணம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.
Recommended Video

லண்டன்: தனிமையில் வாழ்பவர்களைவிட, சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பதைப் போன்று உணர்பவர்களே அதிகம் இதய நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
பொதுவாக யாரும் இல்லாமல் தனிமையில் வாடுபவர்கள், மிகவும் மனவேதனையில் இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத் தான் அதிக அளவில் மன அழுத்தம், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுவதுண்டு.
ஆனால், அவர்களைவிட தனிமை உணர்வில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பாதிப்பிற்கு ஆளாவதாகவும், மற்றவர்களைவிட விரைவில் அவர்கள் மரணத்தைத் தழுவுவதாகவும் கூறுகிறது புதிய ஆய்வு. இது தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் ஆய்வு நடத்தி முடிவைச் சமர்ப்பித்துள்ளார்.

கேள்வி - பதில்:
இந்த ஆய்வில் 13,463 இருதய நோயாளிகளிடம் இருந்து ஆய்வுக் கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டது. அதில், ‘உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன்? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா?' என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

மன அழுத்தம்:
இந்தக் கேள்விகளுக்கு அந்த நோயாளிகள் அளித்த பதிலில், தன் மீது யாரும் அக்கறை இல்லாமல் இருந்ததாகவும், அதனால் தனிமையாக உணர்ந்ததாகவும், அதன் பாதிப்பினாலேயே இருதய நோய் ஏற்பட்டதாகவும் பெரும்பாலானோர் பதில் அளித்துள்ளனர்.

முன்கூட்டியே மரணம்:
சுற்றிலும் ஆட்கள் இருந்தபோதும், தனிமையாக உணர்ந்ததால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் அத்தகைய இருதய நோயாளிகள், எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே மரணம் அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தனிமை விரும்பிகள்:
இந்த ஆய்வின் மூலம் மக்கள் கூட்டத்திலும் தனிமை விரும்பிகளாக வாழ்வோர் தான், பெருமளவில் உடல்பாதிப்பிற்கு ஆளாவது தெரிய வந்துள்ளது. இது அவர்களது உயிருக்கே வினையாவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications