போருக்கு எதிர்ப்பு: பெப்சி, கோக், மெக் டொனால்ட்..ரஷ்யாவில் "பூட்டு போட்ட" பன்னாட்டு நிறுவனங்கள்
மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தற்போது பன்னாட்டு பெரு நிறுவனங்களும் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. குறிப்பாக மெக் டொனால்ட்ஸ், ஸ்டார் பக்ஸ், பெப்சி, கொக்க கோலா, ஜெனரல் எலெக்ட்ரிக் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாக கொண்டுள்ள உலக புகழ்பெற்ற பர்கர் தயாரிப்பு உணவகமான மெக் டொனால்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள 850 கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

மெக் டொனால்ட்
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான கிரிஸ் கெம்சின்ஸ்கி எழுதியுள்ள கடிதத்தில், "ரஷ்யாவில் உள்ள கடைகளை மூடினாலும் அங்கு பணிபுரியும் 62,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவோம். அவர்கள் எங்கள் நிறுவன வளர்ச்சிக்காக மனதார உழைத்தவர்கள். இது எங்களை போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலான காலகட்டம். மீண்டும் கடைகளை எப்போது திறப்போம் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார் பக்ஸ்
அதேபோல் உயர்தர கஃபேவான ஸ்டார் பக்ஸும் ரஷ்யாவில் உள்ள 130 கடைகளை மூடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் ஜான்சன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உக்ரைனுக்கு தார்மீக ஆதரவு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். ரஷ்யாவில் உள்ள 2,000 ஸ்டார்பக்ஸ் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது." எனக் கூறியுள்ளார்.

கோக கோலா
உலக புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான கோக கோலாவும் ரஷ்யாவில் தனது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அந்நாட்டில் உள்ள கோக கோலாவிற்கு சொந்தமான 10 பாட்டில் ஆலைகளையும் அந்நிறுவனம் முடக்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமான கொண்டுள்ள பெப்சிகோ நிறுவனமும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து, அந்நாட்டுடனான வர்த்தகத்தின் ஒரு பகுதியை நிறுத்தியுள்ளது. அதாவது பெப்சி குளிர்பான விற்பனையையும், அந்நாட்டில் உள்ள தங்கள் நிறுவனத்தின் முதன்மையான முதலீடுகளையும் முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், பெப்சி நிறுவனத்தின் பால் உற்பத்தி மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ள பெப்சி, இதன் மூலம் ரஷ்யாவில் உள்ள 20,000 தொழிலாளர்களும் 40,000 விவசாயிகளும் பயனடைவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

எலக்ட்ரிக் பொருட்கள்
அதேபோல் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் மருத்துவ கருவிகள் மற்றும் மின் விநியோக திட்டங்களை தவிர்த்து ஏனைய பணிகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கே.எஃப்.சி. மற்றும் பிஸ்சா ஹட்டின் தாய் நிறுவனமான யம் பிரான்ட்ஸும் ரஷ்யாவில் உள்ள 70 உணவகங்களை மூடப்போவதாக அறிவித்து இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்துவதால் அந்நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் பொருளாதார நடவடிக்கை இழப்பு ஏற்படும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications