பெஷாவர் பள்ளி தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான்: தாலிபான்கள் அடுத்த மிரட்டல்
பெஷாவர்: பெஷாவர் பள்ளி தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் நேற்று 7 தீவிரவாதிகள் புகுந்தனர். அதில் ஒரு தீவிரவாதி 60 குழந்தைகள் இருந்த வகுப்பறைக்கு சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மீதமுள்ள 6 தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 132 குழந்தைகள், 9 பள்ளி ஊழியர்கள் என 141 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. ராணுவம் தங்களையும், தங்களின் குடும்பத்தையும் தாக்குவதற்கு பதிலடி தான் இந்த தாக்குதல் என்று தாலிபான்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி கூறுகையில்,
இந்த தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இனி இது போன்று பல்வேறு தாக்குதல்கள் நடக்கும் என்றார்.
தீவிரவாதிகள் அரபியில் பேசியதாகவும், அவர்கள் பார்ப்பதற்கு வெளிநாட்டவர்கள் போன்று இருந்ததாகவும் மீட்கப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications