பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மணிலா: பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க இந்த மாதம் இயற்கை சீற்றங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. சில வாரம் முன் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் வடமாநிலங்களில் கனமழை பெய்தது.
அமெரிக்காவிலும் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி அந்த தீவையே மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.

எங்கு எப்போது
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆரம்பித்த இந்த சூறாவளி சுமார் 28 மணி நேரம் நீடித்தது. இப்போதுதான் இது கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இது முழுமையாக கரையை கடக்கவில்லை. அங்கு இப்போதும் 300+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

வெளியேறினார்கள்
இந்த சூறாவளி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டுவிட்டது. இதனால், அங்கு சூறாவளி தாக்கும் என்று கருதப்பட்ட நகரங்களில் இருந்து 5 லட்சம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதேபோல் 3 லட்சம் பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பாதிப்பு என்ன
இந்த சூறாவளி காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் சூறாவளியின் பாதிப்பு முடியாததால் உண்மையான சேதத்தை கணக்கிட சில நாட்கள் ஆகும். இதனால் இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

சீனா எச்சரிக்கை
இந்த சூறாவளி தற்போது 350 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. இது பிலிப்பைன்ஸுடன் நிற்க போவதில்லை. இது தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீனாவிற்கும், ஹாங்காங்கிற்கும் இதனால் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications