பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மணிலா: பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க இந்த மாதம் இயற்கை சீற்றங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. சில வாரம் முன் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் வடமாநிலங்களில் கனமழை பெய்தது.
அமெரிக்காவிலும் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி அந்த தீவையே மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.

எங்கு எப்போது
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆரம்பித்த இந்த சூறாவளி சுமார் 28 மணி நேரம் நீடித்தது. இப்போதுதான் இது கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இது முழுமையாக கரையை கடக்கவில்லை. அங்கு இப்போதும் 300+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

வெளியேறினார்கள்
இந்த சூறாவளி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டுவிட்டது. இதனால், அங்கு சூறாவளி தாக்கும் என்று கருதப்பட்ட நகரங்களில் இருந்து 5 லட்சம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதேபோல் 3 லட்சம் பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பாதிப்பு என்ன
இந்த சூறாவளி காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் சூறாவளியின் பாதிப்பு முடியாததால் உண்மையான சேதத்தை கணக்கிட சில நாட்கள் ஆகும். இதனால் இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

சீனா எச்சரிக்கை
இந்த சூறாவளி தற்போது 350 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. இது பிலிப்பைன்ஸுடன் நிற்க போவதில்லை. இது தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீனாவிற்கும், ஹாங்காங்கிற்கும் இதனால் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications