விமானியின் செல்ஃபி மோகத்தால் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்- 2 பேர் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானி ஒருவர் செல்ஃபி எடுத்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் உள்ள கொலரடோ மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி செஸ்னா 150கே என்ற சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி அம்ரித்பால் சிங்(29) மற்றும் பயணி ஒருவர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மையம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் விமானி அறையில் இருந்த கோப்ரோ கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் விபத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அம்ரித்பால் சிங் தனது செல்போன் மூலம் பல செல்ஃபிக்கள் எடுத்துள்ளார். அப்படி செல்ஃபி எடுக்கையில் அவரின் கவனம் சிதறியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
விமானியின் செல்ஃபி மோகத்தால் விமானத்தில் இருந்த பயணியும் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications