ஒபாமாவைச் சந்தித்தார் மோடி
நியூயார்க்: சிலிக்கான் வேலியைக் கலக்கிய கையோடு நியூயார்க் பறந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று நியூயார்க் திரும்பி அங்கு அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் நாடு திரும்புகிறார்.

பிரதமர் மோடிக்கு இன்று அமெரிக்காவில் கடைசி நாள் பயணமாகும். இன்று முழுவதும் அவருக்கு நிகழ்ச்சிகள் உள்ளன. ஏற்கனவே பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை அவர் சந்தித்துப் பேசினார். பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டேவையும் அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார் மோடி. இந்த சந்திப்புக்குப் பின்னர் அமைதி மாநாடு ஒன்றுக்கு ஒபாமா ஏற்பாடு செய்துள்ளார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்ளவுள்ளார்.
மோடியும், ஒபாமாவும் சந்திப்பது ஒரு வருடத்தில் இது 3வது முறையாகும். பிரதமர் மோடியை வரவேற்ற ஒபாமா பிரதமரிடம் சாதாரண முறையில் பேசினார். பின்னர். இரு தரப்பு குழுக்களுடன் மோடியும், ஒபாமாவும் சந்தித்துப் பேசினர். பல்வேறு இரு தரப்பு விவகாரங்கள் குறித்து மோடி, ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications