சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு- ஷாங்கரி லா உரையாடலில் பங்கேற்பு
சிங்கப்பூர் அதிபர் ஹலிமாவை சந்தித்தார் பிரதமர் மோடி.
சிங்கப்பூர்: இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பை இன்று சந்தித்து பேசினார். சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 5 நாட்கள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மலேசியா சென்றார் மோடி.

அங்கு 92-வயது பிரதமர் மஹாதீர் முகமதுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் 'Go Back Modi' என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
Prime Minister Narendra Modi receives a ceremonial welcome at the Istana, the office of the President of the Republic of Singapore. Prime Minister of Singapore Lee Hsien Loong also present. pic.twitter.com/Me9DPNxIHl
— ANI (@ANI) June 1, 2018
பின்னர் சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி. அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் இந்திய மொபைல் "ஆப்"கள் குறித்து மோடி விளக்கினார்.
#WATCH PM Narendra Modi receives a ceremonial welcome at the Istana, the office of the President of the Republic of Singapore. Prime Minister of Singapore Lee Hsien Loong also present. pic.twitter.com/BS8hurWlTx
— ANI (@ANI) June 1, 2018
இந்திய- சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்பாட்டிலான தொழில் முனைவோர் மாநாட்டில் மோடி பங்கேற்றார். இன்று அரசு முறைப்படி அதிபர் ஹலிமா யாகூப்பை சந்தித்து பேசினார். அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஷாங்கரி லா எனப்படும் உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி.












Click it and Unblock the Notifications