மோடிக்கு உயரிய விருது.. இதுவரை வெளிநாட்டு லீடர்கள் வாங்கியதே கிடையாது.. நெகிழ வைத்த எத்தியோப்பியா
அடிஸ் அபாபா: பிரதமர் மோடி இப்போது அரசு முறை பயணமாக ஜார்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜார்டனில் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற நிலையில், எத்தியோப்பியாவிலும் அதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்குப் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் தனது காரில் அழைத்துச் சென்றார்.
பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை அவர் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் ஜோர்டான் புறப்பட்டு சென்றார். இந்தியா - ஜோர்டான் இடையேயான 75 ஆண்டு கால தூதரக உறவின் ஒருபகுதியாக பிரதமர் மோடி சென்றார். ஹுசைனியா அரண்மனையில் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கும் கூட பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II அவரே தனது காரில் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றார்.
பிறகு இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி இரண்டாம் மன்னர் அப்துல்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று எத்தியோப்பியா நாட்டுக்கு சென்றார். எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. குறிப்பாக நோபல் அமைதி விருது பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். மேலும், தனது காரிலேயே அவர் பிரதமர் மோடியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ‛தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' என்ற பெயர் கொண்ட விருதை எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபிய் அஹமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கினார். இதன்மூலம் ‛The Great Honour Nishan of Ethiopia' விருது பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தில் எத்தியோப்பியப் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதுமட்டுமின்றி இன்று பிரதமர் மோடி, எத்தியோப்பிய நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மேலும், அங்கு வாழும் புலம்பெயர் இந்தியர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார். அதன்பிறகு எத்தியோப்பியாவில் இருந்து பிரதமர் மோடி ஓமனுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications