வாஜ்பாய் ஸ்டைலில் ஐ.நா.சபையில் இந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி
நியூயார்க்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியைப் பின்பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் இந்தியில்தான் பேசுகிறார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ‘இந்தி திவாஸ்' விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் தான் பேசுவார் என்று அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் இந்தி மொழியில் பேசிய பெருமை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயையே சேரும் என்று பலத்த கரவொலிக்கிடையே ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது 35 நிமிட சிறப்புரையை இந்தி மொழியிலேயே ஆற்றினார்.
‘இந்தியப் பிரதமராக உங்களிடையே முதன்முறையாக பேசுவதில் பெருமிதம் கொள்கிறேன். வரலாற்றில் அரிதாக காணப்பட்ட பொருளாதார, சமூக மாற்றத்தை நோக்கிச் செல்லும், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்குள்ள இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்தவனாய் உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்' என்று மோடி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications