பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் காரை குறி வைத்து வந்த மர்ம கார்.. கொலை முயற்சியா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாக்கும் முயற்சியாக அவர் காரை குறிவைத்து வந்த காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முர்ரேயில் உள்ள சுற்றுலா ரிசார்டில் இருந்து தனது குடும்பத்துடன் தலைநகரான இஸ்லாமாபாத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று பாதுகாப்பு வாகனங்களை முந்திச் சென்று நவாஸ் ஷெரீப்பின் கார் மீது மோத முயற்சி செய்தது.

ஆனால், உஷாரான பாதுகாப்பு வாகனங்கள் அந்தக் காரை பிரதமரின் கார் பக்கம் செல்ல விடாமல் தடுத்தன. இதனால், அந்தக் கார் பாதுகாப்பு வாகனங்களின் மீது மோதியது.
அதனைத் தொடர்ந்து, அந்தக் காரை மடக்கிப் பிடித்த பாதுகாவலர்கள் அதனை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மர்மநபர் ஓட்டி வந்த காரின் எண் போலியானது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம். பிடிபட்ட நபர் தான் பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றி ஓ்ய்வு பெற்றவர் என்றும், குடும்பத்துடன் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினாராம். இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறதாம்.
லஷ்கர் இ ஜாங்வி என்ற அமைப்பின் தலைவரான மாலிக் இஷாக் என்பவர் கடந்த வாரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனால் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த நிலையில் இந்த மர்மக் காரால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications