அமெரிக்காவில் களைகட்டிய பொங்கல் விழா.. சென்டரல் வேலியில் கோலாகல கொண்டாட்டம்
கலிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கத்தை விடாமல் கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒன் இந்தியா தமிழ் வாசகர் அமெரிக்காவை சேர்ந்த ராஜீ கோவிந்தரராஜன் தனது தமிழ்நாடு நண்பர்களுடன் எப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் என்பதை விவரித்துள்ளார்.

கலிபோர்னியாவின் மன்டேகாவை சேர்ந்தவர் தமிழர் ராஜீ கோவிந்தரராஜன். இவர் சென்டரல் வேலியில் 150 க்கும் மேற்பட்ட தமிழர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தமிழக நண்பர்களை தமிழர் மரபுபடி வரவேற்று அவர்களுக்கு முதலில் இனிப்புகள் வழங்கப்பட்டன. அது போல் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையான போஸ்டர்கள் விழா அரங்கில் ஒட்டப்பட்டன.

விழா அரங்கு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. சுவாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை இருந்தன. சிறிய கிராமம் போல் ஒரு வீடு அமைக்கப்பட்டு அங்கு களிமண்ணால் ஆன பானைகள் அமைக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு காளை கொண்டு வரப்பட்டது. கலாச்சார போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் பொங்கலை விவரிக்கும் வகையில் ஓவியம் வரைந்தனர். பெண்கள் குழு நடனம் ஆடினர், பறை இசைக்கப்பட்டது. அது போல் கித்தாரும் வாசிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், வடை, புளியோதரை. தேங்காய் சாதம், பிரியாணி, சப்பாத்தி, பூரி ஆகியவை பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டை சேர்ந்த நண்பர்களுடன் வெளிநாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடியது மகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாறிவிட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications