கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..!
வாடிகன்: கடும் முதுகுவலி காரணமாக புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.
ஆண்டுதோறும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்வார். அவரிடம் ஆசி பெறுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிவார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் நள்ளிரவு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்கவில்லை.
இது பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளது. இதனிடையே போப் ஆண்டவரின் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இது குறித்து கூறியிருப்பதாவது; ''வயது முதிர்வு காரணமாக முதுகு மற்றும் கால் மூட்டுகளில் வலிகளுடன் போப் ஆண்டவர் அவதிப்பட்டு வருகிறார். இதனால் புத்தாண்டு பிரார்த்தனையில் அவர் பங்கேற்க முடியாமல் போய்விட்டது''.

இதனிடையே இன்று மதியம் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தின் மாடத்தில் தோன்றி மக்களுக்கு ஆசி வழங்குவார் போப் ஆண்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று போப் ஆண்டவரிடம் ஆசி பெற வேண்டி ஏராளமானோர் வாடிகன் நகரில் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ்க்கு 85 வயதாகிவிட்டதால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார் என்பது கவனிக்கதக்கது.












Click it and Unblock the Notifications