ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்
வாட்டிகன்: 5 வார தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது முதிர்வு மற்றும் சுவாச கோளாறு காரணமாக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து உடல்நலம் தேறிவந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88). வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் அவதியுற்று வருகிறார். சிறு வயதிலேயே போப் பிரான்சிஸ்க்கு நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது அவருக்கு சுவாச கோளாறு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனினும் பொது வெளியில் மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 14 ஆம் தேதி சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி ஆஸ்பத்திரியில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஏற்கனவே 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்திருந்தார்.
இதனால் அவரது உடல்நிலை குறித்து பலரும் கவலை அடைந்தனர். ஆனால் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர் போப் பிரான்சிஸ் நலமாக இருப்பதாக வாட்டிகன் செய்தி வெளியிட்டது. அவரது உடல் நிலை தேறியது. இதையடுத்து நேற்று போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்துக்கு அருகில் தான் வசித்து வரும் ஓட்டலுக்கு சென்றார். போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், நிமோனியா பாதிப்பில் இருந்து மீள குறைந்தது அவர் 2 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து 5 வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று முன் தினம் தான் அவர் பொது வெளியில் தோன்றினார்.
அதாவது அவரை காண மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதையடுத்து மருத்துவமனை முன்பு குவிந்த மக்களுக்கு அவர் பால்கனியில் இருந்தபடி ஆசி வழங்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பொறுப்பேற்ற இவர் நீண்ட நாட்கள் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது இதுதான் முதல் முறை. வாட்டிகன் திரும்பியுள்ள போப் பிரான்சிஸ் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications