ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
பாக்தாத்: ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் பிரான்சிஸ் (Pope Francis), ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றுள்ளார்.

கோவிட் மற்றும் பாதுகாப்பு காரணமாக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் இது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது எனது கடமை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈராக் பல ஆண்டுகளாகத் துன்பத்துக்கு ஆளாகியிருப்பதால், தாம் அங்கு செல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
போப் பாதுகாப்பு பணியில் சுமார் 10,000 ஈராக்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் வரவேற்ற பின்னர் உரையாற்றிய போப் பிரான்சிஸ், "நான் ஈராக் வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது 'நாகரிகத்தின் தொட்டில்'. இங்கு ஆயுத மோதல்கள் அமைதியாகட்டும். வன்முறை, தீவிரவாதம், பிரிவினை மற்றும் சகிப்பின்மை போன்றவை முடிவுக்கு வரட்டும். ஈராக் பல போர்களின் பேரழிவு விளைவுகளை சந்தித்துள்ளது.
இந்த நிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், இந்த தேசத்தின் வாழ்க்கைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள், ஒரு வளமான பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. தவிர, தங்களது இந்த பணியை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.
போப் பிரான்சிஸ் BioNTech/Pfizer vaccine தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டார். அவர் உடன் செல்லும் அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், இவர் செல்லும் இடங்களில் பெருமளவில் கூட்டம் கூடும் என்பதால், வைரஸ் பெரியளவில் ஈராக்கில் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications