“இது மதம் மாற மறுத்து உயிரை விட்ட பாதிரியாரின் சிலுவை”- மனம் திறந்த போப்பாண்டவர்!
Subscribe to Oneindia Tamil
வாடிகன்: போப் பிரான்சிஸ் அணிந்திருக்கின்ற சிலுவையானது கடவுள் நம்பிக்கையால் கொல்லப்பட்ட ஈராக்கினைச் சேர்ந்த மதகுரு ஒருவருடையது என்ற உண்மையை அவர் தெரிவித்துள்ளார்.
அதனை ஈராக்கினைச் சேர்ந்த மற்றொரு மதகுரு தனக்கு அளித்ததாக போப் தெரிவித்துள்ளார்.

"ஏசு குறித்த நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்ற உத்தரவிற்கு மறுத்த அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்" என்று அவர் இளம் மதகுருக்கள், சகோதரிகள் துறவற நிகழ்ச்சியில் தெரிவித்தார். "அதைத்தான் நான் அணிந்திருக்கின்றேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈராக்கில் கிட்டதட்ட 4 லட்சம் கிறிஸ்துவ மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். அம்மக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் என்று தீவிரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications