ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு.. மக்கள் பீதி!

ஈக்வடார் மற்றும் பெரு எல்லை இடையே 7.5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

க்விட்டோ: ஈக்வடார் மற்றும் பெரு எல்லை இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.

சரியாக ஈக்வடாரில் இருந்து 224 கிமீ தொலைவில், பெரு எல்லை அருகே அம்பட்டோ என்று பகுதியை இந்த நிலநடுக்கம் தாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மிக மோசமாக குலுங்கி உள்ளது.

Powerful 7.5 magnitude earthquake hits Ecuador, No TSunami warning

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவான காரணத்தால் அதிர்வு பெரிய அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்திய நேரப்படி சரியாக இன்று மதியம் 3.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 நிமிடங்களுக்கு மேலாக இந்த நிலநடுக்கம் நீடித்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட அம்பட்டோ பகுதியில் இருந்து 430 கிமீ தூரம் வரை இது உணரப்பட்டு இருக்கிறது.

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஈக்வடார் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் இருக்கிறார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+