ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு.. மக்கள் பீதி!
ஈக்வடார் மற்றும் பெரு எல்லை இடையே 7.5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
க்விட்டோ: ஈக்வடார் மற்றும் பெரு எல்லை இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
சரியாக ஈக்வடாரில் இருந்து 224 கிமீ தொலைவில், பெரு எல்லை அருகே அம்பட்டோ என்று பகுதியை இந்த நிலநடுக்கம் தாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மிக மோசமாக குலுங்கி உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவான காரணத்தால் அதிர்வு பெரிய அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய நேரப்படி சரியாக இன்று மதியம் 3.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 நிமிடங்களுக்கு மேலாக இந்த நிலநடுக்கம் நீடித்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட அம்பட்டோ பகுதியில் இருந்து 430 கிமீ தூரம் வரை இது உணரப்பட்டு இருக்கிறது.
நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஈக்வடார் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் இருக்கிறார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications