அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட்டை பரிந்துரை செய்த ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன.

கீழ் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளான ஸ்ரீநிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தது. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் ஸ்ரீநினிவாசன் அல்லது 63 வயதாகும் மெர்ரிக்காக இருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீநிவாசன், பிறந்தது இந்தியாவாக இருந்தாலும் வளர்ந்தது அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில்தான். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications