ராஜபக்சேவுக்கு "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" விருது! ரமல்லாவில் தெருவுக்கும் பெயர் சூட்டல்!!
ஜெருசலேம்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்டார் ஆப் பாலஸ்தீனம் விருது வழங்கப்பட இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே, நேற்று ஜோர்தான் நாட்டு இளவரசர் அப்துல்லா இபின் அல் அசனியை சந்தித்தார். ராஜபக்சேவுக்கு அப்போது இதன்போது இலங்கை ஜோர்தான் நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று ஜோர்தானில் இருந்து பாலஸ்தீனத்துக்கு ராஜபக்சே சென்றார். அங்கு யாசர் அராபத் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய ராஜபக்சே, அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததற்காக ராஜபக்சேவுக்கு "ஸ்டார் ஆப் பாலஸ்தீனம்" என்ற விருது அந்நாட்டு அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தலைநகர் ரமல்லாவில் தெரு ஒன்றுக்கும் ராஜபக்சே பெயர் சூட்டப்பட்ட இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மாலத்தீவு அதிபர் வாஹித்துக்கு ஸ்டார் ஆப் பாலஸ்தீனம் விருதை பாலஸ்தீன அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications