மிஸ் இன்டர்நேஷனல் 2014 அழகியாக பியூர்டாரிகோ அழகி வலரி ஹெர்னாண்டஸ் தேர்வு
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த மிஸ் இன்டர்நேஷனல் 2014 அழகிப் போட்டியில் பியூர்டாரிகோ நாட்டைச் சேர்ந்த அழகி வலரி ஹெர்னாண்டஸ் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
21 வயதான இவர் பியூர்டாரிகோவின் கரோலினா நகரைச் சேர்ந்தவர் மாடல் அழகியாக திகழும் இவர் மாணவி ஆவார். நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் வலரி வெற்றி பெற்றார்.
இது 54வது மிஸ் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியாகும். டோக்கியோவின் கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் அழகிப் போட்டி நடந்தது.
தங்கத் தேவதை...
தங்க இழைகளால் ஆன வெள்ளுடையில் தேவதை போல ஜொலித்த வலரி, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வழக்கமாக அழகிகள் அழுவதைப் போல அழுதார். பின்னர் உற்சாகத்தில் குரல் எழுப்பினார்.
மகுடம்...
அவருக்கு 2013ம் ஆண்டு பட்டம் வென்றவரான பிலிப்பைன்ஸ் அழகி மகுடத்தைச் சூட்டினார்.
பெரும் பொறுப்பு...
வெற்றி பெற்றதும் வலரி கூறுகையில், இதை நான் பட்டமாக மட்டும் நினைக்கவில்லை. மாறாக பெரும் பொறுப்பாக கருதுகிறேன் என்று கூறினார்.
ரன்னர்...
இந்த அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக கொலம்பிய அழகி ஜூலேகா சுவாரஸ், 2வது ரன்னர் அப்பாக தாய்லாந்தின் புனிகா குல்சூன்டோர்னட், 3வது ரன்னர் அப்பாக இங்கிலாந்தின் விக்டோரியா டூபி, 4வது ரன்னர் அப்பாக பின்லாந்தின் மில்லா ரோம்ப்பானன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அன்பு, அமைதி தழைக்க...
வலரி மேலும் கூறுகையில், இன்டர்நேஷனல் அழகியாக, உலகம் முழுவதும் அன்பு, அமைதி, ஒற்றுமை தழைக்கப் பாடுபடுவேன் என்றார்.
மிஸ் இன்டர்நேஷனல்...
உலக அளவில் உள்ள முக்கியமான மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் சூப்பர்நஷனல் போட்டிகளுடன் இந்த மிஸ் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில்...
1960ம் ஆண்டு இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது பின்னர் 1968ம் ஆண்டு முதல் ஜப்பானில் இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.