வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம்: கத்தார் மன்னர் வாக்குறுதி
பெர்லின்: வரும் 2022ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் ஃபீஃபா உலகக் கோப்பையையொட்டி அங்கு உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் பிறநாட்டு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தாரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பையையொட்டி கத்தாரில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை திட்டத்தையொட்டி கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஜெர்மனி சென்ற கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானி அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர்கள் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது மன்னர் கூறுகையில்,
தவறுகள் நடந்துள்ளது. ஆனால் அதை திருத்திக் கொள்ள பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊழியர்களின் நிலைமையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்றார்.
உலகக் கோப்பை திட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் உள்ளிட்டவர்கள் ஸ்பான்சரின் அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று கத்தார் அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் 4 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் நேபாளத்தைச் சேர்ந்த 400 ஊழியர்கள் கத்தாரில் இறந்துவிட்டதாக நேபாளைச் சேர்ந்த என்ஜிஓ ஒன்று தெரிவித்தது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications