விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி!
பெர்லின்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 4 நாள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இன்று, ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரிலுள்ள Bucerius Summer School-ல் நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, அவர் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து பேசினார். அன்பால்தான் அதை சரி செய்ய முடியும் என்றார்.
அவர் பேச்சில், விடுதலை புலிகள் பற்றி பேசிய பகுதியை பாருங்கள்.
"எனது தந்தை 1991 ஆம் ஆண்டு தீவிரவாதியால் கொல்லப்பட்டார். அந்த தீவிரவாதி சில வருடங்கள் கழித்து இறந்த போது நான் மகிழ்ச்சி அடையவில்லை. அவரது பிள்ளைகளில் என்னைதான், நான் பார்த்தேன்". இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வை தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.