அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு: மதிப்பு சுமார் ரூ2.5 லட்சம்
வாஷிங்டன்: அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார்.
திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட இந்த ஆந்தையானது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.

அபூர்வ வகை ஆந்தை...
திருடு போன ஆந்தை 'யூரேசியன் டானி' வகையைச் சேர்ந்த 'ஷொ்மன்' எனும் அபூர்வ ரக ஆந்தை ஆகும்.

ஆந்தை மாயம்...
வழக்கமாக சரணாலயத்தை நடத்தி வரும் ஷெனான் மற்றும் அவரது மனைவி மார்ஷா இருவரும் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் பறவைகள் பற்றி பாடம் நடத்துவதற்கு இந்த அபூர்வ ஆந்தையை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சரணாலயத்திற்கு சென்று பார்த்த போது கூண்டிற்குள் ஆந்தையை காணவில்லையாம்.

கள்ளச்சந்தையில்....
இதுகுறித்து ஷெனான் கூறும்போது, ‘நாங்கள் இந்த ஆந்தையை செயின்ட் லூயிஸ் சரணாலயத்திலிருந்து கொண்டு வந்தோம். 'ஷொ்மன்' அபூர்வ ரக ஆந்தை கள்ளச் சந்தையில் சுமார் 4000 டாலர்கள் (இரண்டரை லட்சம் ரூபாய்) வரை விற்கப்படலாம்.

வேட்டையாட தெரியாது...
14 ஆண்டுகள் கூண்டிற்குள்ளேயே இருந்ததால் திருடப்பட்ட ஆந்தைக்கு வேட்டையாடக் கூட தெரியாது" எனறு வருத்தத்துடன் ஷெனாய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications