அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் குதித்த எச்.பி. நிறுவன மாஜி சிஇஓ... !
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஹெச்.பி. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஃபியோரினா திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த கையோடு அவர் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தான் போட்டியிடுவதாக ஹெச்.பி. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஃபியோரினா திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஃபியோரினா கூறுகையில்,
பொருளாதாரம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டவள் நான். இந்த பணிக்கு நான் தான் சிறந்த நபர் என்று நினைக்கிறேன். உலகை அறிந்தவள் நான். அந்த உலகில் யார், யார் உள்ளனர், உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது எனக்கு தெரியும். நான் ஹில்லாரி கிளிண்டனை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்றார்.
60 வயதாகும் ஃபியோரினா கடந்த 2005ம் ஆண்டு ஹெச்.பி. நிறுவனத்தில் இருந்து விலகுமாறு வலியுறுத்தப்பட்டார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் ஃபியோரினா.












Click it and Unblock the Notifications