அமெரிக்காவுக்கு புடினை விட ஒபாமாவால்தான் அதிக ஆபத்தாம்... இதெப்படி இருக்கு!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை விட அதிபர் பராக் ஒபாமாவால்தான் அதிக ஆபத்து என்று அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர், சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் ஆகியோரை விட அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் ஒபாமா என்றும் அவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ், இப்சாஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில்தான் இந்த முடிவு தெரிய வந்து அதிர வைத்துள்ளது. மொத்தம் 2809 அமெரிக்கர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

யாரால், எந்த அமைப்பால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதே அக்கேள்வியாகும். இதற்கு 1 முதல் 5 வரை மார்க் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. 1 என்றால் ஆபத்தே இல்லை. 5 என்றால் அபாயகரம் என்று அர்த்தம்.
இதில் 34 சதவீதம் பேர் ஒபாமாதான் அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமானவர் என்று வாக்களித்து அதிர வைத்துள்ளனர். புடினுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. அஸ்ஸாத்துக்கு 23 சதவீத வாக்குகள் கிடைத்தன.
கடந்த மார்ச் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடந்தது. இதில் 1083 பேர் ஜனநாயகக் கட்சியினர். 1059 பேர் குடியரசுக் கட்சியினர் ஆவர்.
குடியரசுக் கட்சியினரில் 27 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு ஜனநாயகக் கட்சியால் பேராபத்து என்று கூறியுள்ளனர். அதேசமயம், 22 சதவீத ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரால் ஆபத்து என்று கூறியுள்ளனர்.
எந்தத் தீவிரவாத அமைப்பால் அதிக அபாயம் உள்ளது என்ற கேள்விக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 58 சதவீதம் பேர் பேராபத்து என்று கூறியுள்ளனர். அல் கொய்தா அமைப்புக்கு 43 சதவீதம் பேரும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 34 சதவீதம் பேரும், ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு 27 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications