கிம் உடன் கைகோர்த்த புதின்! உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவில் களமிறங்கியது வடகொரிய ராணுவம்!
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா தனது சிறப்பு ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எனும் நாடு ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது வரை எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால், 1990களில் சோவியத் உடைந்தது. இதன் பின்னர் உக்ரைன் தனி நாடாக பிரிந்து சென்றது. அங்குதான் பிரச்னையே தொடங்கியது. உக்ரைன் ஆட்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க, அங்கு விரைவிலேயே அமெரிக்காவின் முழு ஆதரவு கொண்ட அதிபராக ஜெலன்ஸ்கி உருவானார்.

அதன் பின்னர் அமெரிக்காவின் அனைத்து ஒப்பந்தங்களிலும் உக்ரைன் கையெழுத்திட தொடங்கியது. குறிப்பாக நேட்டோ ஒப்பந்தத்தில் இணைந்தது. இதுதான் போருக்கான தொடக்கப்புள்ளி. நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவமாகும். இதில் இணையும் நாடுகளில் நேட்டோ படை நிலை நிறுத்தப்படும். நேட்டோவில் இணைந்த நாட்டின் மீது வெளி நாடுகள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் படைகளும் களத்தில் இறங்கும்.
இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்து போட்டது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் உக்ரைன் ரஷ்யாவுடன் தனது எல்லையை பகிர்ந்துகொண்டிருக்கிறது. நேட்டோ ஒப்பந்தத்தால் அமெரிக்க படைகள், ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இதை ரஷ்யா விரும்பாததால், கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போரை அறிவித்தது.
போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஏராளமான உதவிகளை செய்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு என இன்று வரை ரூ.14,7 லட்சம் கோடியை அமெரிக்கா வாரி வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் தொகையே வெறும் ரூ.4 லட்சம் கோடிதான். இத்துடன் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட தொகை, சுமார் 5 மடங்கு அதிமாகும்.
இவ்வளவு பெரிய தொகையை கொண்டு வாங்கப்பட்ட ஆயுதங்களுடன் களத்தில் இருக்கும் உக்ரைனை சமாளிக்க, வடகொரியாவிலிருந்து ரஷ்யா புதிய வீரர்களை இறக்கியுள்ளது. சுமார் 15,000 வீரர்கள் வரை ரஷ்யா களமிறங்கியுள்ளதாகவும், இவர்களின் அடையாளத்திற்கு தனியான அடையாள அட்டையை வழங்கியுள்ளதாகவும் தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
சபாஷ்.. கை கோர்க்கும் தமிழர்கள்-கன்னடர்கள்! பெங்களூரில் முதல்முறையாக நடக்கிறது ஒற்றுமை மாநாடு!
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இயங்கும் சில ஏவுகணைகளை வட கொரியாதான் வடிவமைத்து கொடுத்திருக்கிறது. அதை பராமரிக்கவும், இயக்கவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்யவும், சில பொறியாளர்களை வடகொரியா அனுப்பி வைத்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து சிறப்பு ராணுவ வீரர்களையும் அனுப்பியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
50களில் கொரியா நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர், வடகொரியா கம்யூனிச நாடாகவும், தென் கொரியா அமெரிக்காவின் ஆதரவுடன் முதலாளித்துவ நாடாகவும் மாறியது. அப்போதிலிருந்து வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் நல்ல நட்பு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications