ரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்!
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள்.
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ரஷ்யாவை உலுக்கி உள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளானது ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் வகை விமானம் ஆகும்.
இந்த பயணிகள் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ!
கோளாறு
இந்த ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பிரச்சனைக்கு உள்ளானது. இதில், ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் திரும்பி மாஸ்கோ நோக்கி வந்தது. ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முயன்றது.
ஆனால் முடியவில்லை
ஆனால் விமானம் முதல்முறை லேண்ட் செய்ய முயன்ற போது லேண்ட் செய்ய முடியவில்லை. இதனால் இரண்டாவது முறை கஷ்டப்பட்டு விமானத்தை தரையிறக்கினார்கள். விமானத்தை இறக்கிய போது, திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் தீ பிடித்தது. வேகமாக விமானத்தின் ஒரு பக்கம் தீ பிடித்தது.
|
மிக மோசம்
இதில் விமானம் ஒரு பக்கம் உரசிக்கொண்டே சென்றது. விமானத்தின் ஒரு பக்க இறக்கை உடைந்து சிதறியது. உள்ளே பயணிகள் அலறல் வெளியே கேட்டது. இந்த விமானத்தில் 78 பேர் பயணம் செய்தார்கள். இந்த விபத்தில் 41 பேர் உடல்கருகி பலியானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எப்படி நடந்தது
இதில 37 பேர் படுக்காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.