சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்? உக்ரைன் போருக்கு நடுவே எகிறும் டென்ஷன்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சூடானில் உள்நாட்டு பிரச்சினை நடந்து வரும் நிலையில், அங்குள்ள துணை ராணுவ படையால் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அப்போது முதல் தொடர்ச்சியாக இந்த சண்டை நீடித்து வருகிறது.

இரு பக்கமும் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ச்சியாக சண்டை நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு இன்னும் பலன் கிட்டவில்லை. இந்த போர் ஒரு பக்கம் இருக்க, சூடானில் ரஷ்யாவின் சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரஷ்யாவுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், தற்போது ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. சூடானில் ரேபிட் போர்ஸ் எனப்படும் விரைவு படையினரை(RSF) ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான், சூடான் வான்பரப்பில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சூடான் ரேபிட் சப்போர்ட் படை கூறுகையில், "சூடான் ராணுவத்திற்கு ஆதரவாக வந்த அந்நிய நாட்டு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானம் பீப்பாய் குண்டுகளை வீசியது.
கூலிப்படைகளாக செயல்படும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் இந்த நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்படும்" என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய தூதரகம், சாட் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள டர்பர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் சரக்கு விமானம் பற்றிய தகவலை உறுதி செய்ய விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications