அதிபர் அஷ்ரப் கானியை விட தலிபான்கள் கையில் சிறப்பாக உள்ள ஆப்கானிஸ்தான்.. ரஷ்யா புகழாரம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் ஆட்சியை விட தலிபான்களின் பிடியில் சென்றுள்ள அந்த நாடு தற்போது சிறப்பாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காபூலை பாதுகாப்பான பகுதியாக மாற்றிவிட்டார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Recommended Video

    Ashraf Ghani எங்கே, எப்படி தப்பினார் ? | Russian Embassy தகவல் | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார். இதையடுத்து முன்னாள் அதிபர் வீட்டுமுன்னர் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அது போலே அமெரிக்க படைகள் வெளியேறுவதை கண்டித்து அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பும் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் தலிபான்களை எதிர்த்து ஆப்தானிஸ்தானே போராடாதபோது அமெரிக்க படைகள் ஏன் போராடி உயிரிழக்க வேண்டும். அதனால் படைகள் வாபஸ் பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தான்

    இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் நேற்றைய தினம் மாஸ்கோ வானொலியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது. காபூலும் பாதுகாப்பாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காபூலை பாதுகாப்பானதாக தலிபான்கள் மாற்றிவிட்டனர்.

    தலிபான்கள்

    தலிபான்கள்

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலைமையில் இருந்ததை விட தலிபான்கள் பிடியில் சிறப்பாக உள்ளது. அவர்களது அணுகுமுறை நன்றாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ரப் கானி தப்பிவிட்டார். இது மிகவும் இழிவானது. தலிபான்கள் காபூலில் நுழைந்தவுடனேயே அரசையும் அமெரிக்க படைகளையும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    ரஷ்ய தூதரகம்

    ரஷ்ய தூதரகம்

    மேலும் ரஷ்ய தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் ரஷ்ய அதிகாரிகள் 100 பேர் சிக்கியுள்ளனர். அவர்களது பாதுகாப்பு குறித்து தலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அது போல் அஷ்ரப் மின்னல் வேகத்தில் நாட்டை விட்டு தப்பியதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

    தப்பியோடிய அஷ்ரப் கானி

    தப்பியோடிய அஷ்ரப் கானி

    அஷ்ரப் கானி தப்பும் போது ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது மிகவும் இழிவான செயல் என்றும் இன்னமும் ஹெலிகாப்டரில் கொண்டு வரும் அளவுக்கு பணங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் அவற்றையும் சேர்த்து எடுக்க முடியாத கானி ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது. நாட்டை விட்டு தப்பியதற்கு அஷ்ரப் கானிக்கு ரஷ்ய அதிபர் புடினின் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், கானி நாட்டை விட்டு ஓடி வந்தது தவறு. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+