For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ட்டி வைத்து மாணவர்களுடன் பாலியல் உறவு: ஆசிரியை கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பார்ட்டிக்கு அழைத்து 3 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ் பள்ளி ஆசிரியை எலன் நிமிக் (வயது 29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

எலன் தனது வீட்டில் நடந்த ஒரு பார்ட்டிக்கு, தனது வகுப்பு மாணவர்களை அழைத்து உள்ளார். பார்ட்டிக்கு வந்த பல மாணவர்களில், 17 வயதுடைய 2 மாணவர்கள் மற்றும் 18 வயதுடைய 1 மாணவர் என மொத்தம் 3 மாணவர்களுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இது பற்றிய தகவல் தெரிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதும் அவர்கள், ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். மேலும், ஆசிரியை வீட்டில் இருந்து பல ஆபாச புகைப்படங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகியான பிரைன் பேண்டன் கூறும்போது, ''ஆசிரியை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியையை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய உள்ளோம்" என்று தெரிவித்தார்.

English summary
The 29-year old married mother of three was charged Thursday, May 8, with three counts of sexual battery, two of them felonies because the students were 17, authorities said. The third was 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X