பாக். வெளியுறவு துறை செயலருடன் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சந்திப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலர் அய்ஜாஸ் அகமதுவை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு உறவுகள், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல், பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் டெல்லியில் பிரிவினைவாத அமைப்பினருடன் பேச்சு நடத்தியது ஆகிய சம்பவங்கள் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் சார்க் நாடுகளுக்கு இந்திய வௌியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் நல்லெண்ண பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் பூடான், வங்கதேச நாடுகளைத் தொடர்ந்து இன்று அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலர் அய்ஜாஸ் அகமதுவை சந்தித்தார்.
கடந்த பல மாதங்களாக நின்று போயிருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 7 மாதங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக அய்ஜாஸ் கூறுகையில், மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை தரும். காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் இந்திய வெளியுறவுத் துறைசெயலர் ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications