ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுத்திக்கு சாய்னா தகுதி
சிட்னி: ஆஸ்திரேலிய ஒபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார்.

சிட்னி நகரில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டி ஒன்றில், தரவரிசையில் 6-ஆம் இடத்தில் உள்ள சாய்னா நெஹ்வால், ஜப்பான் வீராங்கனையான ஈரிகோ ஹிரோஸ் எதிர்த்து மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 21-18, 21-9 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார் சாய்னா நெஹ்வால். அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள சீனாவின் ஷிசியன் வாங்குடன் சாய்னா நெஹ்வால் மோத உள்ளார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து, ஸ்பெயினின் கரோலினா மார்டினை எதிர்த்து விளையாடினார். இதில் 17-21, 17-21 என்ற நேர்செட்களில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications