சௌதி அரேபியா: ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது
ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.
திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியில், ஒரு கம்பளத்தில் மீது இரண்டு ஆண்கள் ஒன்றாக நடந்து வருவதையும், அவர்கள் மீது வண்ணக் காகிதங்கள் தூவப்படுவதையும் காண முடிகிறது.
அந்த இரண்டு ஆண்களில் ஒருவர் மணப்பெண்களுக்கான ஆடையை அணிந்திருப்பதுபோல தோன்றுகிறது.
- சௌதி: சொகுசு சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை
- சௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன?
பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமலே எதிர்பாலினத்தவரின் ஆடைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய 'கிராஸ் டிரெஸ்ஸர்' ஒருவரையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறரையும் அடையாளம் கண்டுள்ளதாக, கடந்த திங்களன்று மெக்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மெக்காவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழாவின்போது, இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அது அங்கிருந்தவர்களுக்கு வியப்பளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று காவல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
பாலின அடையாளங்கள் அல்லது பாலின சார்பு ஆகியவை தொடர்பாக சௌதி அரேபியாவில் பிரத்யேக சட்டங்கள் எதுவும் இல்லையெனினும், திருமண உறவுக்கு வெளியில் கொள்ளும் தொடர்புகள், ஒருபாலுறவு மற்றும் தவறான நடத்தைகள் என்று கருதப்படும் பிற செயல்களுக்கு இஸ்லாமிய சட்டங்களின் கோட்பாடுகளை பின்பற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
பொது ஒழுங்கு, பொது அமைதி, மத விழுமியங்கள், அந்தரங்க உரிமை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் இணையதள நடவடிக்கைகளை அந்நாட்டின் இணையதள குற்றங்களுக்கு எதிரான சட்டம், குற்றமாகக் கருதுகிறது.
பிப்ரவரி 2017-இல், சில திருநங்கைகள் உள்பட 35 பாகிஸ்தான் நாட்டவர்களை சௌதி காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மீனோ பாஜி என்பவர் காவலில் இருக்கும்போது மரணமடைந்தார்.
அவரது உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தாலும், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக சௌதி காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- கலிஃபோர்னியாவில் கடும் மழை, நிலச்சரிவு: 13 பேர் பலி
- கார் பழுதாகி இந்தியச் சாலையில் நின்ற சீனப் பிரதமர்
- "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதில் இல்லை தேச பக்தி"
- இதை செய்தால் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே தடுக்கலாம்
- விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி













Click it and Unblock the Notifications