Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீசாரை அவமதித்த சவுதி பெண்ணுக்கு 50 சவுக்கடிகள்!

Subscribe to Oneindia Tamil

Saudi Woman Sentenced to 50 Lashes for Insulting Morality Police
ரியாத்: சவுதியில் போலீசாரை அவமதிக்கும் வகையில் பேசிய பெண் ஒருவருக்கு 50 சவுக்கடிகள் தண்டைனையாக வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் போலீசாரை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது என்பதாகும்.

அப்படிப் பேசிய ஒரு பெண்ணிற்கு 50 சவுக்கடிகள் தண்டைனையாக வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்:

அந்தப் பெண் ஜெட்டா நகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். அப்போது ரோந்து சென்ற போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

உடை கட்டுப்பாடுகள்:

ஏனெனில் சவுதி அரேபியாவில் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உடை கட்டுப்பாடுகள் மிகவும் கண்டிப்பாக கடை பிடிக்கப்படுகிறது.

30 நிமிடங்கள் மூடல்:

மேலும் தொழுகையின் போது சுமார் 30 நிமிடங்கள் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

வசை பாடிய பெண்மணி:

எனவே அங்கு சோதனையிட சென்ற போலீசாரை அந்த பெண் தொழில் அதிபர் அவமதித்தார். போலீசாரை பொய்யர்கள் என்றும் வசை பாடினார்.

நீதிமன்றத்தில் வழக்கு:

அதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் மீது ஜெட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

50 சவுக்கடிகள்:

இந்த வழக்கில் அப்பெண்ணுக்கு ஒரு மாதம் சிறையும், 50 சவுக்கடியும் தண்டனை ஆக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அப்பெண்ணுக்கு மெக்கா நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+