போலீசாரை அவமதித்த சவுதி பெண்ணுக்கு 50 சவுக்கடிகள்!

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் போலீசாரை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது என்பதாகும்.
அப்படிப் பேசிய ஒரு பெண்ணிற்கு 50 சவுக்கடிகள் தண்டைனையாக வழங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்:
அந்தப் பெண் ஜெட்டா நகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். அப்போது ரோந்து சென்ற போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
உடை கட்டுப்பாடுகள்:
ஏனெனில் சவுதி அரேபியாவில் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உடை கட்டுப்பாடுகள் மிகவும் கண்டிப்பாக கடை பிடிக்கப்படுகிறது.
30 நிமிடங்கள் மூடல்:
மேலும் தொழுகையின் போது சுமார் 30 நிமிடங்கள் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
வசை பாடிய பெண்மணி:
எனவே அங்கு சோதனையிட சென்ற போலீசாரை அந்த பெண் தொழில் அதிபர் அவமதித்தார். போலீசாரை பொய்யர்கள் என்றும் வசை பாடினார்.
நீதிமன்றத்தில் வழக்கு:
அதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் மீது ஜெட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
50 சவுக்கடிகள்:
இந்த வழக்கில் அப்பெண்ணுக்கு ஒரு மாதம் சிறையும், 50 சவுக்கடியும் தண்டனை ஆக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அப்பெண்ணுக்கு மெக்கா நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications