15 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சீன பள்ளி ஆசிரியர் கைது!
பீஜிங்: கடந்த இரண்டாண்டு காலமாக தன்னிடம் படிக்கும் 15 சிறுவர்களை வலுக்கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சீன நாட்டின் தென்மேற்கிலுள்ள யுன்னான் மாகாணத்தில் உள்ளது குயிச்சோ நகரம். இங்குள்ள லிமா என்ற துவக்க பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றியவர் 32 வயதான ஜான்ங். சீன மொழிப்பாடம் கற்றுவிக்கும் ஆசிரியராக இவர் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் முடிந்து 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த இரு வருடங்களாக தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 15 பேரை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்த விவகாரம் வெளியே வந்ததை தொடர்ந்து ஆசிரியர் ஜான்ங் கைது செ்யயப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உடலில் காயம்படவில்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் ஆசிரியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஆண்டில் ஹூனான் மாகாணத்தில் துவக்கப் பள்ளி மாணவிகள் 19 பேரை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஹுபே மாகாணத்தில் 61 வயது ஆசிரியர் இதேபோன்ற குற்றச்சாட்டின்கீழ் கைதானார்.