பாரீ்ஸ், மாலி தாக்குதலால் பீதி.. பெய்ஜிங்கில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: பாரீஸ் மற்றும் மாலியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து சீன அரசு, தனது தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் தலைநகரில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுகள் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் போலீஸ் படையினரும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லும் வகையில் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Security stepped in Beijing after Paris, Mali attacks

மேலும் தீவிர வாகனக் கண்காணிப்பு, பார்சல்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது உள்ளிட்டை முடுக்க விடப்பட்டுள்ளன. பாரீஸில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மாலியில் ஹோட்டலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தற்போது சீனாவிலும் அச்சம் எழுந்துள்ளது.

நவம்பர் 15ம் தேதி முதலே சீன அரசு பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது பெய்ஜிங் நகரம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாலி ஹோட்டல் சம்பவத்தில் 3 சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே சீனாவைக் குறி வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்தே பெய்ஜிங்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புப் படையினர் செயல்பட வேண்டும் என்று சீன தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவரும், போலீஸ் தலைவருமான குவா செங்குன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+